Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து பட்டதால் சுருண்டு விழுந்த நடுவர்: இறுதி போட்ட்யில் நடந்த பரபரப்பு

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (08:31 IST)
பந்து பட்டதால் சுருண்டு விழுந்த நடுவர்
கடந்த சில நாட்களாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணி மற்றும் சௌராஷ்ட்ரா அணிகளுக்கு இடையே நேற்று ராஜ்காட்டில் தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வீரர் ஒருவர் பந்தை எடுத்து மிக வேகமாக ஸ்டம்பை நோக்கி எறிந்தார். பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்குவதற்காக அவர் பந்தை எறிந்தாக கூறப்படுகிறது.
 
ஆனால் அவர் எறிந்த பந்து எதிர்பாராதவிதமாக நடுவரின் அடிவயிற்றில் பட்டதால் அந்த இடத்திலேயே  நடுவர் சுருண்டு விழுந்தார். இதனால் வீரர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் இருப்பினும் அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், அவர் இன்னும் ஓரிரு நாளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென பந்து பட்டு நடுவர் ஒருவர் சுருண்டு விழுந்ததை அடுத்து தற்போது மாற்று நடுவர் நியமனம் செய்யப்பட்டு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments