Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (12:42 IST)
ஐபிஎல் 2018 தொடரின் 43 வது லீக் ஆட்டமான இன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்பூரில் நடைபெற இருக்கிறது.
 
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியோ 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 
 
இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே-ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும். ஆனால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். 
 
அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும். ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 
 
ராஜஸ்தான் அணி வீரர்கள் வழக்கமாக இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments