Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தியில் பட்டையை கிளப்பிய தமிழக வீராங்கனைகள்! – தேசிய விளையாட்டு தொடரில் சாதனை!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (15:15 IST)
குஜராத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய விளையாட்டுத் தொடர் குஜராத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு வகையான போட்டிகளில் போட்டியிட்டு வருகின்றனர்.

ALSO READ: புதுச்சேரியில் இன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: எதிர்த்து நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

இதில் கோலூன்றி தாண்டுதல் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிக உயரம் கோலூன்றி தாண்டி ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் உயரத்தை லாவகமாக தாண்டி முதல் இடத்தை பிடித்தார்.

அதை தொடர்ந்து பவித்ரா வெங்கடேஷ் இரண்டாம் இடத்தையும், பரணிகா இளங்கோவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். கோலூன்றி தாண்டும் விளையாட்டில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களையும் தமிழக வீராங்கனைகளே பெற்றுள்ளது குறித்து பலரும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments