Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நிதி: ரூ.52 லட்சம் கொடுத்த ‘சின்னத்தல’

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:31 IST)
கொரோனா தடுப்பு நிதி: ரூ.51 லட்சம் கொடுத்த ‘சின்னத்தல’
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக மிக வேகமாக தாக்கி வரும் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்
 
இதனை அடுத்து டாட்டா நிறுவனம் 1,500 கோடி, நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, என பலர் கோடி கணக்கில் லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாக அளித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா தனது பங்காக ரூபாய் 52 லட்சத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு எதிராக நாம் ஒன்றினைந்து போராட வேண்டிய நேரமிது. இதில் என்னுடைய பங்களிப்பாக ரூ.52 லட்சம் தருகிறேன். இதில் ரூ.31 லட்சம் பிரதமர் நிவாரணநிதிக்கும், ரூ.21 லட்சம் உத்தரப் பிரசேத மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுக்கிறேன். நீங்களும் உங்களால் முயன்றதை கொடுங்கள். என தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பிசிசிஐ, சச்சின் தெண்டுல்கர் உள்பட விளையாட்டு உலகில் இருந்து லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments