Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:03 IST)
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு அரையிறுதியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

 
இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் இந்திய வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சு காரணமாக 43 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனையடுத்து இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா 6 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சென்று உள்ளதால் அரையிறுதிப் போட்டியில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 17வது ரன் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்தார். 
 
5000 ரன்களை கடந்த முதல் முதல் இந்திய வீராங்காணை என்ற சாதனையை இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் படைத்தார். அடுத்தபடியாக இந்தியாவின் ஆல் ரவுண்டர் ஹர்மன்பிரீத் சிங் 5000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கணை என்ற சாதனையை படைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments