Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநகரத்து இளைஞர்களுக்கான வாய்ப்பை தோனிதான் உருவாக்கினார் – காங்கிரஸ் தலைவர் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ‘சிறுநகரங்கள், கடைக்கோடி நகரங்களில் இருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்றால் அதற்கான கதவுகளை திறந்துவிட்டது தோனிதான்.’ எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments