Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:21 IST)
19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் அவுட் ஆனாலும் அதன் பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தது சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக அவர் பியூஸ் சாவ்லா மற்றும் தீபக் சஹர் பந்துகளை அடித்து அடித்து நொறுக்கி சிக்ஸர்களாக விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்வரை ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200ஐ தாண்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments