Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஓவரையும் சரிபாதியா பிரிச்சிடலாம்! – சச்சினின் பலே யோசனை!

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:48 IST)
50 ஓவர் போட்டிகளை காண ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து வரும் சூழலில் அதை தவிர்க்க புதிய ஐடியாவை சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

20 ஓவர் போட்டிகள் தொடங்கியது முதல் 50 ஓவர் போட்டிகளுக்கான மவுசு குறைய தொடங்கியுள்ளது. சில மணி நேரங்களில் முடியும் 20 ஓவர் போட்டிகளை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் நாள் கணக்கில் நடக்கும் 50 ஓவர் போட்டிகளை பார்க்க விரும்புவதில்லை.

இதனால் 50 ஓவர் போட்டிகளுக்கு டிஆர்பி குறைவதோடு விளம்பர நிறுவனங்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை ஒன்றை முன் வைத்துள்ளார்.

50 ஓவர் கொண்ட போட்டிகளை சரிபாதியாக பிரித்து இரண்டு இன்னிங்க்ஸாக நடத்தலாம். 25 ஓவர் என்பதால் முதல் அணி எளிதில் ஆட்டத்தை முடித்து இரண்டாவது அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரே அடியாக பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என்று இல்லாமல் இருப்பது கிரிக்கெட் வீரர்களையும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும் என தெரிவித்துள்ளார்.

சச்சினின் இந்த பரிந்துரையை பிசிசிஐ தலைவரும், சச்சினின் நண்பருமான சவுரவ் கங்குலி ஏற்றுக்கொள்வாரா அல்லது பரிசீலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments