Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபா குருநாத் மெய்யப்பன் – தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றித் தேர்வு !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:35 IST)
பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்க்ட் வாரியத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்ய லோத கமிட்டி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளில் இருக்கக்கூடாது, ஒரே நபர் இரண்டு பதவிகள் வகிக்கக்கூடாது என்பன முக்கியமானவை. இதையடுத்து தமிழகக் கிரிக்கெட் வாரியத்துக்கான தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் மெய்யப்பன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக கடைசி நாளான நேற்றுவரை யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மாநில கிரிக்கெட் சங்கம் ஒன்றில் தலைவரான முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபருமான சீனிவாசனின் மகள் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments