Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (19:05 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் அந்த அணிக்கு 125 கோடி பிசிசிஐ பரிசாக கொடுத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பணத்தை எவ்வாறு பிரித்து வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

இதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட  விளையாடாத நிலையில் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேட்டிங், பில்டிங், பௌலிங் பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடியும், உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்,  டிரைனர்கள் ஆகியோர்களுக்கு தலா 2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவில் உள்ளவர்களுக்கு தலா ஒரு கோடியும், ரிசர்வ் வீரர்களுக்கு தலா ஒரு கோடியும் வழங்க பிசிஐ முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐசிசி சார்பில் ஏற்கனவே 20 .42 கோடி இந்திய அணிக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments