Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (14:27 IST)
2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள ஐசிசி தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு அந்த தொடர் நடக்க உள்ள நாடுகளின் பெயர்களையும் அறிவித்துள்ளது.

இதில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தையும் லாகூர் மைதானத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs நியுசிலாந்து அணிகள் ஆகிய போட்டிகளை பிப்ரவரி 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments