Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சியை தொடர்ந்து பீலே சாதனையை முறியடித்த ரொனால்டோ!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:23 IST)
சமீபத்தில் க்ளப் ஆட்டங்களின் கோல் சாதனையில் பீலேவை மெஸ்சி முறியடித்த நிலையில் தற்போது ரொனால்டோவும் பீலேவின் மற்றுமொரு சாதனையை முறியடித்துள்ளார்.

உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே பிரபலமானவர்களாகவும், சமகால கால்பந்து ஜாம்பவான்களாகவும் விளங்குபவர்கள் லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதில் ரொனால்டோ தற்போது ஹுவாந்தஸ் அணி சார்பாக லா லிகா, சிரி ஏ கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யுடினீஸ் அணியுடன் நடந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோலின் மூலமாக அவரது மொத்த கோல் கணக்கு 758 ஆக உயர்ந்துள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான ரொனால்டோ தேசிய போட்டிகளில் 102 கோல்களும், க்ளப் ஆட்டங்களில் பல்வேறு அணிகளுக்காக 656 கோல்களும் அடித்துள்ளார்.

தற்போது 758 கோல்கள் அடித்துள்ளதன் வாயிலாக உலகிலேயே அதிகமான கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரொனால்டோ. பீலே தேசிய மற்றும் க்ளப் ஆட்டங்கள் சேர்த்து மொத்தமாக 757 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments