Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை போன்ற அணிக்கு விளையாடுவதில் பிரஷர் அதிகமாக உள்ளது… ரோஹித் ஷர்மா!

Advertiesment
ஐபிஎல்
, சனி, 9 அக்டோபர் 2021 (10:46 IST)
கடந்த முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு கூட செல்லாமல் வெளியேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கண்டெடுத்த மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியனான மும்பை அணி இந்த முறை ப்ளே ஆஃப்க்கு கூட தகுதி பெறவில்லை. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா ‘மும்பை போன்ற பிரான்ச்சைஸுக்கு விளையாடுவதால் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பிரஷர் என்று கூறமாட்டேன். இந்தியாவில் சிறப்பாக ஆடினோம். இங்கு வந்ததும் ஒரு அணியாக தோற்றுவிட்டோம். ஆனால் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.’ என பேசியுள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிறது. அதில் அணிகள் ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்ஸர் படேல் செய்த தவறால் தோல்வியைத் தழுவிய டெல்லி அணி!