Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்மேன் இல்லாத ஒருநாள் தொடர் – இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு !

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:08 IST)
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா தசைப் பிடிப்புக் காரணமாக விலகியுள்ளார்.

நியுசிலாந்தில் டி 20 போட்டிகளை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடஇருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

கடைசியாக நடந்த டி 20 போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது ரோஹித் ஷர்மா காலில் தசைப் பிடிப்புக் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் பந்துவீச்சின் போதும் அவர் களத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் முழுதாக குணமடையாததால் அவர் 5 ஆம் தேதி நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments