முதல் ஓவரில் ரோகித் சர்மா அவுட்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (14:12 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில்  டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இந்தியா தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது பந்தில்ல் போல்ட் ஆகி அவுட் ஆகி விட்டார்.

இந்த நிலையில் தற்போது சுப்மன் கில் மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இலங்கை இன்றைய போட்டியில் வென்றால் மட்டும் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments