Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸன் அபார சதம்: 204 ரன்கள் குவித்தது சென்னை அணி

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (21:55 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது புனே நகரில் 17வது போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால், சென்னை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்ஸன் அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
 
ராஜஸ்தான் தரப்பில் கோபால் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களையும், லாஹின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். வெற்றி பெற 205 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments