Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்குப் பின் தோனியை கட்டிப்பிடித்து அழுத கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான தோனியும் ரெய்னாவும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்து பரபரப்பைக் கிளப்பினர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதையடுத்து சில மணிநேரங்களிலேயே அவரது நண்பரான ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தார். இவ்விருவரும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வு குறித்து பேசியுள்ள ரெய்னா’ ஓய்வு முடிவை அறிவித்தபின் நானும் தோனியும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதோம்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments