Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டிகள்: ஜெய்ப்பூர், உபி அணிகள் வெற்றி

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (22:36 IST)
கடந்த இரண்டு வாரங்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் வென்றனர் 
 
முதலில் நடந்த ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்தே மிக அபாரமாக விளையாடி 37 புள்ளிகளை பெற்றது. இந்த அணியை எதிர்த்து விளையாடிய ஹரியானா அணியினரால் 21 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனை அடுத்து 16 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி பெற்றது 
 
இதன் பின்னர் நடந்த இரண்டாவது பேட்டையில் உத்தரபிரதேச அணியும் மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு கடைசி வரை இருந்த நிலையில், கடைசி சில நிமிடங்களில் உத்திரப்பிரதேச அணியினர் சுதாரித்து விளையாடியதால் 27 புள்ளிகளைப் பெற்றனர், மும்பை அணி 23 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இன்றைய போட்டிக்குப் பின்னர் ஜெய்ப்பூர் அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணியும் 15 புள்ளிகள் பெற்றுள்ளது. மும்பை அணி 12 புள்ளிகளும் பெங்கால் அணி மற்றும் பாட்னா அணிகள் பதினோரு புள்ளிகளையும் பெற்றுள்ளன
 
நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments