Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (06:55 IST)
புரோ கபடி போட்டிகள் ஆறாவது வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன 
 
 
முதலில் நடைபெற்ற போட்டியில் ஹரியானா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னணியில் வந்தனர். இறுதியில் ஹரியானா அணி 41 புள்ளிகளையும் குஜராத் அணி 25 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது 
 
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி அபாரமாக விளையாடி 40 புள்ளிகளையும் மும்பை அணி 24 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியின் முடிவுக்குப் பின்னர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய அணிகள் முதல் மூன்று இடத்திலும், பெங்கால், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்தில் உள்ளன. இன்று தமிழ் தலைவாஸ் அணிக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments