Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (23:08 IST)
ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்களின் சொதப்பலான ஃபீல்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.



 


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த இலக்கை மிக எளிதில் பாகிஸ்தான் எட்டிவிடும் என்று நினைத்த போதிலும் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ்ந்ததால் போட்டி கடுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் சர்பிராஸ் அஹமதி மற்றும் மொகம்மது அமிர் நிலைத்து நின்று வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது.

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments