Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (20:01 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது அனில் கும்ளே செயல்பட்டு வருகிறார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
சேவாக் உள்பட பலரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவரான வினோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments