Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (20:01 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது அனில் கும்ளே செயல்பட்டு வருகிறார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
சேவாக் உள்பட பலரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவரான வினோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments