Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முடிவு

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (19:24 IST)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது
 
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் கூட முடியாததால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிரா ஆனது என்பது குறிப்பிடதக்கது 
 
பாகிஸ்தானின் அபித் அலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் சதம் அடித்தனர் என்பதும், இலங்கையின் டி சில்வா சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அபித் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்ததால் தற்போது 0-0 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments