Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு அபராதம் … ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (16:54 IST)
நேற்றைய போட்டியில் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்திய அணி வீரர்களின் பவுலிங் மிக மோசமாக இருந்ததால் 374 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் முதலில் பந்துவீசிய இந்திய அணி அரைமணிநேரம் தாமதமாக பந்துவீசியது. இதையடுத்து பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த விசாரணைக்கு இந்திய கேப்டன் விராட் கோலி நேரடியாக வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments