Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட்: தோல்வி மேல் தோல்வி: பொறுப்பு கேப்டனும் திடீர் விலகல்

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (07:50 IST)
சொந்த மண்ணில் ஜிம்பாவே அணியிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடமும் படுதோல்வி அடைந்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இழந்துவிட்ட இலங்கை, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் என கருதப்படுகிறது.



 
 
இந்த நிலையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து வருவதால் அணியில் இருந்து காயம் என்ற பெயரில் வீரர்கள் தப்பிக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் தரங்காவிற்கு பதிலாக களமிறங்கிய பொறுப்பு கேப்டன் கபுகேதாராவும் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் தற்போது கபுகேதாராவும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments