Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் – கபில்தேவ் கருத்து !

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (10:02 IST)
உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் இந்தியக் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் அறிவித்துள்ளன. இந்திய அணி கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சம்மந்தமாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தைக் கூறியுள்ளார்.’ தோனியைப் பற்றி நான் என்ன சொல்வது ?.. அவர் மற்ற எல்லாரையும் விட நாட்டுக்கு மிக சிறந்த சேவையாற்றியுள்ளார்.  அவருக்கு அதிஷ்டம் கிடைக்க நாம் வாழ்த்த வேண்டும். அவர் இம்முறையும் நமக்கு உலகக்கோப்பை வாங்கிக்கொடுப்பார். ரிஷப் பண்ட்  மற்றும் தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்வுக் குழுவினர் தங்கள் வேலையை செய்துள்ளனர். உலகக்க்கோப்பையை வெல்வது எளிதல்ல. நம் வீரர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷடம் கிட்டினால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments