Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: பிசிசிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:33 IST)
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்  என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு  புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments