Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (10:09 IST)
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி கடந்து சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
13வது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடை குறைவில் இந்திய வீராங்கனை சாக்ஷி கஜகஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்ட நிலையில் அவர் அபாரமாக வெற்றி பெற்றார்.
 
ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி தற்போது காலிறுதிக்கு நுழைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காலிறுதி மற்றும் அரை இறுதியில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை சாக்ஷி சாம்பியன்ஷிப் பட்டம் பெற வேண்டும் என இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அதேபோல் 75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா தாய்லாந்து வீராங்கனையை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

அடுத்த கட்டுரையில்
Show comments