Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலி மைதானங்களில் விளையாடுவது இந்திய வீரர்களுக்கு சவால்! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:57 IST)
ஐபிஎல் போட்டிகள் ஆளில்லாத காலி மைதானத்தில் நடக்க இருப்பது இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என நியுசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள நியுசிலாந்து வீரர், ஸ்காட் ஸ்டைரிஸ் ‘ஆளில்லாத மைதானங்களில் விளையாடுவது மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு வீரர்கள் காலியான மைதானம் அல்லது குறைவான எண்ணிக்கை கொண்ட மைதானங்களில் விளையாடி உள்ளனர். ஆனால் இந்திய மைதானங்களோ மிகப் பெரியது. இதனால் ரசிகர்கள் மூலம் கிடைக்கும் உற்சாகம் அவர்களுக்குக் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்