Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் மீண்டும் கொடூரம்; கொரோனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி!

கேரளாவில் மீண்டும் கொடூரம்; கொரோனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி!
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:47 IST)
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் கற்பழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதுபோன்ற மற்றொரு வன்கொடுமை சம்பவமும் நடந்துள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். எனினும் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் என்பவர் அந்த பெண்ணிடம் கொரோனா குறித்து விசாரிப்பது போல அடிக்கடி போன் மூலமாக பேசி வந்துள்ளார்.

அந்த பெண்ணின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில் தனது வீட்டிற்கு வந்து கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதீப் கூறியுள்ளார். இதற்காக பிரதீப் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணை கட்டிப்போட்டு வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரதீப்பை கைது செய்துள்ளனர். தொடர்ந்து பெண்கள் மீது கொரோனா பாதிப்பை கூட கருதாமல் நடத்தப்படும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதைய என்ன பண்றது…? ரூ.45 அயிரம் போனை அபேஸ் செய்தவர்…திருப்பிக் கொடுத்த சம்பவம் !