Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் ஆகாமலே அவுட்டான ரோஹித் சர்மா? – ரசிகர்கள் கொந்தளிப்பு

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (18:23 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அவுட் ஆகாத நிலையில் அவருக்கு அவுட் கொடுத்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க வீரரான ரோகித் ஷர்மா அதிகமான ரன்கள் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 18 ரன்களில் அவுட் ஆனார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்கெட் விழுந்ததும் நடுவர்கள் அது விக்கெட் இல்லை என்றே கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்து மட்டையில் உரசியபடி, பேடில் பட்டு போனது. எனினும் இதை மூன்றாவது நடுவர் விக்கெட் என அறிவித்தார். ஆனால் அது அவுட் இல்லை. நடுவர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு துணைபோகிறார்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments