Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஒருநாள் போட்டி.. இலங்கையை அடுத்து நியூசிலாந்தையும் வீழ்த்துமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (19:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்த நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற இருக்கும் நிலையில் மதியம் ஒன்று முப்பது மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் வலுவாக இருப்பதால் இலங்கையை அடுத்து நியூசிலாந்து அணியையும் இந்தியா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக சுப்மன் கில், விராத் கோலி ஆகியோர் நல்ல  பேட்டிங் ஃபார்மில் உள்ளனர் என்பதும் அதேபோல் ஷமி, சிராஜ் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவுக்கு இலங்கையை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தொடர் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments