Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்த இந்தியா: டிரா செய்யுமா?

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (19:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
ஆனால் இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 2-வது இன்னிங்சில் 79 ரன்களுக்கு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருப்பதால் இந்தியா சுதாரித்து நிதானமாக ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் ரோகித் சர்மா 40 ரன்களும் புஜாரா 26 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாடி இந்த போட்டியை டிரா செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments