Publish Date: Fri, 27 Aug 2021 (17:19 IST)
Updated Date: Fri, 27 Aug 2021 (17:21 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது.
கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தக் கொரொனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவரை உள்ள ஒரே ஆயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோர் கொரோன தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கலின் சம்பளத்தில் மாதம் ரூ.15 000 பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.