Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:33 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் சற்று முன் வரை 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 49 ரன்களும் சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் சற்று முன் இலங்கையில் போட்டி நடைபெறும் மைதானத்தில் திடீரென மழை பெய்ததன் காரணமாக தற்போது போட்டி நிறுத்தப்பட்டுள்ளது
 
மழை நின்றவுடன் மீண்டும் போட்டி தொடங்குமா? அல்லது மழை நீடித்தால் போட்டி ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments