Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்தியாவால் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது? ஹர்பஜன் சிங்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (13:16 IST)
50 லட்சம் மக்கள் கொண்ட குரேஷியா உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது நாம் ஏன் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நேற்று முன்தினம் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷியா, பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இருந்தாலும் குரேஷியா முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. 
 
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான குரேஷியா இறுதி போட்டியில் விளையாடியதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
50 லட்சம் மக்கள் தொகை குட்டி நாடான குரேஷியா பைனல் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் இந்து,  முஸ்லிம் என போட்டி போடுகிறோம். சிந்தனையை மாற்றினாலும் நாடு மாறும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
 
உலகிலே கிரிக்கெட்டுக்கு இந்தியாவில்தான் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் அண்மையில் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரின் கால்பந்து விளையாட்டின் மீதான் அக்கறை சற்று மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments