Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் கார்ட் கொடுத்த நடுவரை புரட்டி எடுத்த வீரர்: கால்பந்து போட்டியில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (19:28 IST)
ஜெர்மனியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் வீரர் ஒருவருக்கு நடுவர் ரெக்கார்ட் கொடுத்ததால் அந்த வீரர் ஆத்திரமடைந்து நடுவரின் முகத்தில் கடுமையான தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜெர்மனியில் எப்.எஸ்.வி மியூன்ஸ்டர்  என்ற அணியில் விளையாடிய ஹெஸ்ஸி என்ற வீரர் விதிகளை மீறி விளையாடியதாகவும், சக வீரர்களை தாக்கியதாகவும் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்தார். மேலும் உடனே அவர் மைதானத்தில் இருந்து வெளியேற நடுவர் அறிவுறுத்தினார் 
 
ஆனால் நடுவரின் முடிவால் அதிருப்தி அடைந்த ஹெஸ்ஸி அவரிடம் வாக்குவாதம் செய்தார். மைதானத்தை விட்டு வெளியேற முடியாது என்றும் கூறி ஆத்திரமாக கூறினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் நடுவரின் முகத்தில் சரமாரியாக ஹெஸ்ஸி தாக்கினார்.
 
இதனை அடுத்து நிலைகுலைந்து விழுந்த நடுவரை மற்ற வீரர்கள் அரவணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட நிர்வாகிகள் ஹெஸ்ஸிக்கு மூன்று ஆண்டுகள் விளையாட தடை விதித்தனர். அது மட்டுமன்றி அவருடைய அணிக்கும் ஆறு மாதம் தடை விதித்து 553 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments