Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு ரசிகர்கள் தந்த கௌரவம் – ஐசிசி அறிவிப்பு !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:31 IST)
ஐசிசி எழுப்பிய கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு அதிகளவிலான ரசிகர்கள் தோனி என்ற பதிலை அளித்துள்ளனர்.

இன்னும் சில நாட்ஜளில் 2019 ஆம் ஆண்டு முடிய இருக்கிறது. இதையடுத்து இந்த தசாப்தத்தின் (2010- 2019)  சிறந்த பேட்ஸ்மேன் யார், பவுலர் யார் என்ற கேள்விகள், கணக்கெடுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த தசாப்தத்தின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை ஐசிசி தனது டிவிட்டர் தளத்தில் எழுப்பியது. இதற்கு ரசிகர்கள் பலரும் கோஹ்லி, கேன் வில்லியம்ஸன், தோனி எனப் பல கருத்துகளைத் தெரிவிக்க அதன் முடிவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கணக்கெடுப்பின் முடிவில் தோனிதான் இந்த பதிற்றாண்டின் சிறந்த கேப்டன் எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 அந்தஸ்து ஆகிய சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments