Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை தெரியாது என்று சொன்ன ஷரபோவாவிடம் மன்னிப்புக் கேட்ட ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:37 IST)
2015 ஆம் ஆண்டு சச்சினை தனக்கு தெரியாது எனக் கூறிய ஷரபோவா மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.

2015 ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். அப்போது அவரிடம் சச்சின் பற்றிக் கேட்கப்பட்ட போது ‘அவரை எனக்கு தெரியாது’ எனக் கூறியிருந்தார். அப்போது கோபமான ரசிகர்கள் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்து கண்டித்தனர்.

ஆனால் இப்போது சச்சின் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகப் பேசியுள்ள நிலையில் பலரும் சச்சினை விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதில் சிலர் ’சச்சினை நீங்கள் தெரித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்போது உங்களுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டோம். இப்போது அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். ’ என்றவாறு கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments