ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா: வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (06:33 IST)
இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
 
521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
 
இருப்பினும் இங்கிலாந்து அணியின் பட்லர் 106 ரன்களும், ஸ்டோக்ஸ் 62 ரன்களும் எடுத்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் பும்ராவின் அபார பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றியை கிட்டத்தட்ட தடுத்துவிட்டது. பும்ரா ஐந்து விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுக்களையும் ஷமி மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்தியா வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட் வீழ்ந்தால் போதும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 210 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments