Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவான் போலவே செஞ்சுரியை மிஸ் செய்த ஸ்மித்: இலக்கை எட்டுமா ஆஸ்திரேலியா?

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (20:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 340 ரன்கள் எடுத்தது என்பதும் 341 என்ற இலக்கை நோக்கிய ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மிக அருமையாக விளையாடிய நிலையில் 98 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் போல்டாகி அவுட்டானார். 2 ரன்களில் இவர் சதத்தை மிஸ் செய்தது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது
 
முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது 96 ரன்களில் தவான் அவுட் ஆனார் என்பதும் 4 ரன்களில் அவர் சதத்தை மிஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சதத்தை நெருங்கிய நிலையில் அவற்றை மிஸ் செய்தது இந்த போட்டியில் ஏமாற்றமாக கருதப்படுகிறது 
 
இந்தநிலையில் 341 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 114 ரன்கள் என்ற இலக்கை 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments