Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று வருவது நம் கட்டுப்பாட்டில் இல்லை… தேவ்தத் படிக்கல்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:44 IST)
பெங்களூர் அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து மீண்டு அணிக்குள் திரும்பியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றார். அதனால் இந்த ஆண்டு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அணியுடன் இன்னும் பயோபபுளில் இணையவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் அவர் அணியினருடன் பயோபபுளில் இணைந்துள்ளார்.

இப்போது பயிற்சியில் ஈடுபடும் அவர் விரைவில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்த நேர்காணலில் ‘கொரோனா தொற்று வந்தது பின்னடைவுதான். ஆனால் அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. தொற்று உறுதியானதும் அதிலிருந்து விரைவில் விடுபட எண்ணினேன். அதன் பின் பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இப்போது பூரண குணமடைந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments