Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியிடம் சென்னை தோல்வி

Webdunia
சனி, 19 மே 2018 (06:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52வது போட்டியில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டாலும் அந்த அணிக்கு இதுவொரு ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது. 
 
இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் ராயுடு 50 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடியபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments