Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு இனி சோதனை காலம் தான்: எச்சரிக்கும் மைக்கேல் கிளார்க்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:38 IST)
இந்திய அணி கேப்டன் கோலிக்கு இனி உண்மையான சோதனை காலம் துவங்கிவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி, படுதோல்வியை சந்தித்தது. 
 
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உண்மையான சோதனைக்காலம் துவங்கிவிட்டது. இதில் இருந்து அவரே தான் மீண்டு வரவேண்டும். 
 
மேலும், இதுவரை அவரது தோளில் தான் இந்திய அணி வென்றது என்பது தற்போது தெளிவாகிவிட்டது. இனி அவருக்கு வீரர்களின் ஆதரவு தேவை. உலகில் வெற்றிகரமாக இருந்த எல்லா கேப்டன்களும் இதையே தாரகமந்திரமாக வைத்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே, கோலியும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என கிளார்க் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments