Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:34 IST)
ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது ஜடேஜா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் தீவிரம் குறித்து அறிய நேற்று ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரிதான காயம் எதுவும் இல்லை என்றும் அவரும் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவித்தனர்
 
இதனை அடுத்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜடேஜா தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments