Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரொனால்டோவை தங்களுக்காக ஆடவைக்க விரும்பும் ஆசிய க்ளப் அணி!

ரொனால்டோவை தங்களுக்காக ஆடவைக்க விரும்பும் ஆசிய க்ளப் அணி!
, ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:29 IST)
கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெடட் கிளப்பில் இருந்து வெளியேறினார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பாக, அவர் இதுவரை விளையாடி வந்த மான்செஸ்டர் யுனைடெடட் அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் இப்போது அவரை தங்கள் க்ளப்புக்காக ஆட வைக்க ஆசியாவைச் சேர்ந்த AL NASSR அணி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 3 ஆண்டுகளுக்கு ரொனால்டோவுக்கு 225 மில்லியன் டாலர் கொடுக்க தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இதை செய்யவேண்டும்… ஹர்பஜன் சிங் கருத்து!