Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஜெய்ச்சிக்கிட்டே இருக்காங்க?!; வாய்பிளந்த உலக நாடுகள்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:24 IST)
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது.

உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

அதுபோல நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்திய ஏ அணி மால்டோவா அணியையும், இந்திய பி அணி எஸ்டோனிய அணியையும், இந்திய சி ஆணி மெக்சிகோ அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதேபோல பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணி அர்ஜெண்டினா அணியையும், இந்திய பி அணி லாட்வியா அணியையும், இந்திய சி அணி சிங்கப்பூர் அணியையும் வென்றது. நேற்று நடந்த 6 போட்டிகளில் இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி பெற்று உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments