Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. ஒருசில மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (11:09 IST)
சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே வரும் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஒரு சில மணி நேரத்தில் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 1500, 3000 ரூபாய் ஆகிய குறைந்த விலை டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டதாகவும்  அதனை அடுத்து 5000, 6000, 8000,10,0000 ஆகிய டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாகவும்  கூறப்படுகிறது 
 
இருப்பினும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கவுண்டரில் நேரடி டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரூ.1500 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments