Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (07:56 IST)
உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் அபார வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் போர்ச்சுக்கல் மற்றும் பிரேசில் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
இன்று நடந்த முதல் போட்டியில் பிரேசில் மற்றும் செர்பிய அணிகள் மோதியதில் பிரேசில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. இதனை அடுத்து ஆட்டநேர முடிவில் பிரேசில் 2 கோல்கள் போட்டதால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது கடைசிவரை செர்பிய அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணிக்கு எதிராக கானா அணி விளையாடிய போட்டி நடைபெற்றபோது போர்ச்சுகல் அணிக்கு சவால் விடும் வகையில் கானா அணியும் அடுத்தடுத்து கோல் போட்டது. இருப்பினும் போர்ச்சுகல் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று மாலை வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகளுக்கும் கத்தார் மற்றும் செனேகல் அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments