ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

Siva
ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (17:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
 
மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 38 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 21 ஓவர்களில் 131 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் அபாரமாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். அவர் இந்த ஆட்டத்தின் நாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments