Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பத்தி ராயுடு பந்துவீச தடை! ஐசிசி அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (08:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது. ஆனாலும் அவர் பேட்ஸ்மேன் என்பதால் இந்த தடையால் இந்திய அணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கருதப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் போட்டித்தொடர் முடிந்தது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் அம்பத்தி ராயுடு பந்துவீசினார். ஆனால் அவரது பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் தெரிவித்ததால் அவர் 14 நாட்களுக்குள் ஐசிசி பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவின்படி 14 நாட்களுக்குள் சோதனை செய்ய அம்பத்தி ராயுடு ஆஜராகவில்லை. .இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச, அவருக்கு தடை விதிக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் அம்பத்தி ராயுடு பந்துவீச மாட்டார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments